நெல்லை துணை கமிஷனர் அதிரடி
திருநெல்வேலி மாநகர காவல்துறையினர் கடந்த இரண்டு நாட்களில் 941 ஹெல்மெட் வழக்குகள் மற்றும் 33 ஓவர் ஸ்பீடு வழக்குகள் உட்பட 1,172 மோட்டார் வாகன வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.இது குறித்து நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் சரவணன் கூறுகையில், நகரத்தின் பல்வேறு இடங்களில் ஏராளமான இளைஞர்கள் வேடிக்கையான பந்தயங்களைச் செய்கிறார்கள். மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மற்றும் பொதுத்தொல்லை தரும் பந்தயங்களை எவரேனும் செய்தால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க மாநகர காவல்துறை திட்டமிட்டுள்ளோம் என்றார்