புதுதில்லி இந்தியாவின் தலைநகரமான தினம் இன்று(1931).
டில்லி மாநகரானது, 1649 முதல் 1857 வரையிலான ஆண்டுகளில், மொகலாய பேரரசுகளின் அரசியல் மற்றும் நிதிகளை கையாளும் மையமாக இருந்தது.
1900ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு தனது தலைமையகத்தை கல்கத்தாவலிருந்து தில்லிக்கு மாற்றியது. கல்கத்தா, இந்தியாவின் கிழக்கில் இருப்பதால் ஏற்பட்ட தகவல் பரிமாற்றத்தின் சிக்கல்களுக்கு தீர்வாக, தனது தலைநகரத்தை இந்தியாவின் வடக்கில் இருக்கும் டில்லிக்கு மாற்றியது.
1911ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி மன்னர் ஐந்தாம் ஜார்ஜ், அரசி மேரி மற்றும் அரசி கன்சார்ட் ஆகியோரைக் கொண்ட புது டில்லிப் பேரவை கூட்டப்பட்டு, பிரிட்டிஷ் இந்தியாவின் புதிய தலைநகராக தில்லியை அறிவித்தனர்.
மேலும் அரசுப்பிரதிநிதி தங்குவதற்கான மாளிகைக்கு டில்லியிலுள்ள கரோனேசன் பூங்காவில் அடிக்கல் நாட்டினார்.
புதுடில்லியின் பெரும்பகுதியான கட்டுமானப்பணிகள் 1911ஆம் ஆண்டில் ஆரம்பமாகியிருந்தாலும், அனைத்து வேலைகளும் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட்டன.
இறுதியில் 1931ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் நாள் பிரிட்டிஷ் இந்தியாவின் தலைமை ஆளுனரான இர்வின் பிரபு அவர்களால் புதுடில்லி இந்தியாவின் தலைநகராக தொடங்கி வைக்கப்பட்டது.