ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 பிடிஒக்கள் பணியிடமாற்றம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 பிடிஒக்கள் பணியிடமாற்றம் செய்து கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார்.
ஆற்காடு பிடிஓ பணியாற்றிவந்த வேதமுத்து அரக்கோணம் பிடிஓ வாகவும், அங்கு பணியாற்றி வந்த பிடிஓ பாஸ்கரன் நெமிலி பிடி ஓவாகவும் பணியிடைமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் அதேபோல், நெமிலி பிடிஓவாக பணியாற்றி வந்த அன்பரசன் சோளிங்கர் பிடிஒவாகவும், அங்கு பணியாற்றி வந்த சாந்தி ஆற்காடு பிடிஓவாக பணியிடைமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.