வியாபாரிகளிடம் பணம் பறித்த நபர் கைது அரக்கோணம் தாலுகா போலீசார் நடவடிக்கை
அரக்கோணம் அடுத்த மேல் ஆவதம் பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் மர்ம நபர் ஒருவர் மிரட்டி பணம் பறிப்பதாக அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் அங்கு சென்று பார்த்த போலீசார் அங்குள்ள கடை ஒன்றில் பணம் பறிக்க முயன்ற நபரை பிடித்து விசாரித்தனர் அப்போது அதே பகுதியை சேர்ந்த குபேந்திரன் மகன் தினேஷ் குமார் (எ) காந்தி (23).என்பது தெரியவந்ததையடுத்து தினேஷ்குமாரை போலீசார் கைது செய்து இது குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.