மின் ஊழியர் கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
அரக்கோணம், அடுத்த தக்கோலம் பாண்டியம்மா கோவில் தெருவை சார்ந்த ஹரிதாஸ்(35). இவர் மின் வாரியத்தில் வயர்மேனாக வேலை செய்து வருகின்றார் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் மின் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது
உடனே அருகில் இருந்தவர்கள் மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து தக்கோலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.